Tuesday, January 18, 2011

சொந்தக் கதை

அமெரிக்கா வந்து இன்றுடன் சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த மாதம் எனது தந்தைக்கு எழுபதாவது பிறந்த தினம் வருகிறது. விமரிசையாக கொண்டாடுகிறோம். குடும்பத்துடன் செல்கிறேன். எனது இரு சகோதரர்களையும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கப் போகிறேன்.

அமெரிக்கா வந்த பிறகு நான் இந்தியா செல்லும் முதல் பயணம். வரும் பொழுது இருவராக வந்தோம். இப்பொழுது மூவராக போகிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறது.

இருந்தாலும் பிரசவம், குழந்தை பேறு என்று கடந்த ஓராண்டுகளாக பல முறை விடுப்பெடுத்தாகி விட்டது. அதனால் இம்முறை பயணம் வெரும் 10 நாட்களே.

அதில் சென்னை, மும்பை, ஹீரடி, பெங்களூர், புட்டபர்த்தி, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் என்று பல இடங்களுக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. விமான நிலையத்திலேயே இம்முறை பொழுதை கழிப்போம் என்று நினைக்கிறேன். கை குழந்தையுடன் இவ்வளவு இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாம் என்றைக்கு பெரியவர்கள் சொல்லை கேட்டிருக்கிறோம். அதனால் விமான டிக்கெட் பதிவு செய்தாகி விட்டது. மூன்று நாட்களே திருச்சியில் இருப்பது போல வருகிறது.

அடுத்த முறையாவது நான்கு வாரங்களுக்கு குறையாமல் செல்ல வேண்டும். பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல வேண்டும். சென்னையிலும் பெங்களூரிலும் உள்ள அனைத்து நண்பர்களையும் பார்க்க வேண்டும். இம்முறை அதற்கு அவகாசம் கிடைக்காது.

Monty யை (இவனை பற்றி உங்களுக்கு தெரியாது. பின்னர் சொல்கிறேன்) பத்து நாட்கள் வெளியில் விட வேண்டும். அதுதான் கஷ்டமாக உள்ளது. அவனுக்கு இதுவே முதல் முறை. அழாமல் நன்றாக சாப்பிட வேண்டும். அவனது நலத்தை விசாரிப்பதற்கும், அவனுடன் பேசுவதற்கும் இன்டர்னேஷனல் ரோமிங் வசதியினை செய்திருக்கிறோம். பயணம் முடிந்து ஊர் திரும்பும் வரை Monty யின் நினைவாகவே இருக்கும்.