Saturday, April 10, 2010


நியூசிலாந்து - 3

Queenstown விமான நிலையத்திலிருந்து Wakatipu ஏரிக்கரையில் இருக்கும் எங்களின் ஹோட்டலுக்கு செல்லும் வழியெல்லாம் பசுமை பசுமை பசுமை. கண்கொள்ளா காட்சி. ஹோட்டலுக்கு சென்று பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள Gondala ride செல்லலாம் என்று இருந்தோம். ஆனால் அன்று ஒரே மழை. அதனால் எனது மனைவியும் அவரது சகோதரியும் ஷாப்பிங் சென்று விட, நானும், எனது மனைவியின் சகோதரியின் கணவரும் பஞ்ஜீ ஜம்பிங் சென்றோம்.

அது உலகின் முதலில் உருவான பஞ்ஜீ ஜம்பிங் இடம். Kawarau Bridge என்று பெயர். குஷி படத்தில் "மொட்டு ஒன்று மலர்ந்திட" பாடலுக்கு முன்னர் விஜய் குதிப்பாரே அந்த இடம் தான் அது. எனது முதல் அனுபவம். அருமையாக இருந்தது.

அன்று இரவு Gondala ride சென்று பின்னர் ஒரு படகு சவாரியும் சென்றோம். மறுநாள் முழுதும் Milford Sound பயணம். ஒரே நாளில் சென்று திரும்பினோம். முழுதும் கண்ணாடியினால் ஆன ஒரு பேரூந்தில் நான்கு மணி நேர பயணம். பின்னர் இரண்டு மணி நேரம் படகில் பயணம். வழி முழுதும் அருமையான காட்சிகள்.

மொத்தத்தில் அதுவும் ஒரு இனிமையான பயணமாக அமைந்தது. ஆனால் ஒரே குறை. நாங்கள் Queenstown இல் இருந்தெ அந்த மூன்று நாட்களில் தான் மும்பை தாக்குதல்கள் நடந்தன. பலர் கொன்று குவிக்கப்பட்டனர். நாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் அங்கே உள்ள அனைவரும் மும்பையை பற்றி எங்களிடம் விசாரித்துக் கொண்டே இருந்தனர்.

மறுநாள் அங்கிருந்து கிளம்பி Auckland சென்றோம். நியூசிலாந்தில் இருக்கும் மிகப் பெரிய நகரம் இது. இங்கும் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம் ஏற்பட்டது. முதல் நாள் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து Auckland நகரத்திற்கு வருவதற்கு பேரூந்தில் பயணம் செய்தோம். ஓட்டுனரிடம் வழி விசாரித்தோம். அதற்கு அவர், நகரத்தின் பிரதான சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி வந்து எங்களுக்கு வழி காட்டிவிட்டு பின்னர் சென்றார். சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வண்டி அங்கே நின்றிருக்கும். அவ்வளவு தோழமையுடன் பழகுகிறார்கள் நியூசிலாந்து மக்கள்.

அங்கே உள்ள Sky Tower உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்று. அதன் மேலே சென்று நகரின் அழகை கண்டு ரசித்தோம். மேலும் அங்கே பல கடற்கரைகள் உள்ளன. Muriwai Beach அங்கே உள்ள மிக அழகான ஒரு கடற்கரை.

பத்துநாட்கள் சந்தோஷமாக கழித்துவிட்டு மனம் நிறைய மகிழ்ச்சியுடன் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். வாழ்வில் மறக்க முடியாத ஒரு பயண அனுபவமாக இது அமைந்தது.

அங்கு நான் எடுத்த புகைப்படங்களை முன்னரே எனது புகைப்பட பதிவில் ஏற்றி இருக்கிறேன். இருந்தாலும் அடுத்த பதிவில் இங்கும் அளிக்கிறேன்.

0 Comments: