Friday, September 04, 2009


Status Update

இந்த மே மாதம் கடைசி வாரத்தில் திருச்சியிலிருந்து அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அக்டோபர் கடைசியில் திரும்பி செல்கிறார்கள். அவர்களுக்கு இதுவே முதல் அமெரிக்க பயணமானதால் பல இடங்களையும் சுற்றி காமித்து வருகிறோம். நியூயார்க், அட்லாண்டிக் சிடி, வாஷிங்டன் டிசி, நயாகரா, பிட்ஸ்பர்க் என்று வார இறுதிகளில் ஊர் பயணங்களாகவே இருக்கின்றது.

சென்ற ஆண்டு மாமனாரும் மாமியாரும் வந்திருந்தார்கள். அப்பொழுதும் இது போலவே ஊர் பயணமாகவே இருந்தது. வார நாட்களில் அலுவலகத்தில் ஓய்வு, வார இறுதியில் கார் ஓட்டும் வேலை என்று நானும் தங்கமணியும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். வார இறுதியில் கார் ஓட்ட வேண்டும் என்று நினைத்தாலே கடுப்பாக இருந்தாலும் பெற்றோர் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சிக்காகவே அதனை பொருட்படுத்த முடியவில்லை. அதிலும் குறிப்பாக நயாகரா சென்ற பொழுது அங்கு எனது அப்பா அம்மாவிடம், "இதை எல்லாம் நான் பள்ளியில் பாடத்தில் படித்தது. இங்கு வருவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை." என்று கூறிய பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்று வரும் ஒவ்வொரு இடத்தினை பற்றியும் அவர் குறிப்பெடுத்துக் கொள்கிறார். தேதி வாரியாக ஊரின் பெயர், போகும் வழி, அந்த ஊரின் பெருமை என்று அந்த பட்டியல் பெரிதாக இருக்கிறது.

பெற்றோர்கள் வந்திருக்கும் செய்தி கேட்ட உடனே அனைவரும் கேட்பது ஏதேனும் விசேஷமா? என்பது தான். "ஏன் ஐயா! பெற்றோர்களை அழைத்தாலே அது ஆயா வேலை செய்வதற்காகத் தான் இருக்க வேண்டுமா? ஊர் சுற்றி பார்க்க, நம்முடன் சில நாட்கள் தங்க அவர்களை அழைக்க கூடாதா?" என்று கேட்க தோன்றுகிறது. என்ன செய்வது அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களை போலவே மற்றவர்களையும் நினைக்கிறார்கள்.

அவர்கள் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கின்றது. நல்லபடியாக நோய் நொடி இல்லாமல் பத்திரமாக அவர்கள் இந்தியா சென்று சேரும் வரை எனக்கு மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.

4 Comments:

ILA (a) இளா said...

//மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது //
இதுதான் நிதர்சனம்..

SathyaPriyan said...

//
/மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது/
இதுதான் நிதர்சனம்..
//
உண்மை தான் இளா. வருகைக்கு நன்றி.

Karthika said...

Good good nalla enjoy pannunga....California vara idea kandipa sollunga, you are most welcome to stay at our place. I am reading your blog after a very long time....keep writing and have fun.

Vetirmagal said...

This is what we felt when we visited US in 2005. My daughter was in south, and she took the car on rent and we roamed all over eastern belt. (upto N.Falls).

Your blog brought those memories rushing. Believe me, parents do not fall sick!. They really enjoy it.:-)

Hope, by God's grace, your parents are back happily in India.

Visiting your blog after a long time.