Tuesday, April 08, 2008


ரங்க பவனம் - IV

அவன் எதிர் பார்த்தபடியே வெளியிலேயே காத்திருந்தாள் தீபா. "என்ன? சீக்கிரம் சொல்லு. அப்பா இன்னும் தூங்கலே."

"இங்கே சொல்ல முடியாது. வா மொட்டை மாடிக்கு போகலாம்." என்று கூறி அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஆறாவது மாடியை கடந்து மொட்டை மாடிக்கு விரைந்தான்.

"என்ன? இப்போவாவது சொல்லு."

"Deepa...." 'Deepi' என்பது 'Deepa' ஆனதை கவனித்தாள். அதிலிருந்தே சொல்ல வந்த விஷயம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்தாள்.

"இதை எப்படி உன் கிட்ட சொல்றதுன்னு தெரியல. I think I am in love with Saumya and I have none other than you to share this with." என்று பட்டென்று சொல்ல வந்ததை போட்டு உடைத்தான்.

எந்த சலனமும் இல்லாமல் அவன் சொல்லியதை கேட்ட தீபா, "Well good luck with that. எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசிக்கலாம்." என்று சொல்லி கீழே இறங்கினாள்.

சொல்லி முடித்ததும் அவள் கோபப்படுவாள். அவளை சமாதானப் படுத்தலாம் என்றெல்லாம் எண்ணி வந்தவனுக்கு அவளின் இந்த செயல் திகைப்பை ஏற்படுத்தியது. மெதுவாக அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். பின்னர் தானும் மெதுவாக திரும்பி சென்றான்.

மறுநாள் தீபா, சௌம்யா இருவரும் அவர்களின் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட, அன்றைய பொழுது அவனுக்கு ஒரு யுகம் போல கழிந்தது. திங்களன்று வகுப்பில் தீபாவும் அவனுடன் சரியாக பேசவில்லை. இவன் இருமுறை அவளிடம் சென்று பேச முயன்றும் அவள் இவனை தவிர்த்து விட்டாள். அடுத்த நாள் செவ்வாயன்று அவனது வகுப்பு நண்பன் சிவாவின் பிறந்த நாள் என்பதால் அவன் கல்லூரிக்கு வரவில்லை. திரைப்படத்திற்கு சென்று விட்டான்.

புதன் கிழமை லேப் இருப்பதால் தீபா கட்டாயம் அவனை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து அவன் அமைதி காத்தான். அந்த மூன்று நாட்களில் அவன் சௌம்யாவுடனும் கூட தொலைப்பேசியில் பேசவில்லை. 'தனது காதலைப் பற்றி சௌம்யாவிடம் தீபா சொல்லிவிட்டாளா? அவளது பதில் என்ன? தீபா என்ன நினைக்கிறாள்?' என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.

புதனன்று லேப்பில் சோதனை தொடங்கும் முன்னர் சோதனையை விரிவுரையாளர் விளக்கிக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் இருந்த தீபாவிடம், "Deepi, this is too much. Say something." என்றான்.

"About what?"

"About my love. What else?"

"அதை பத்தி உன் கிட்ட நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"

"இங்கே பாரு, இந்த Hide & Seek விளையாட்டு என்கிட்டே வேண்டாம். You are more important to me than anybody else in this world. You are my best friend. உன்கிட்டே தான் நான் என்னோட love பத்தி சொல்ல முடியும். If my lady love happens to be your sister, do you think I should send my feelings to graves? அது என்னால முடியாது. I am sorry."

"நான் அப்படி செய்ய சொன்னேனா?"

"Then why didn't you tell this to Saumya?"

"My foot. I care a damn. Had you known me as much as I know you, you wouldn't have asked this Bharghav."

சட்டென்று இருவருக்கும் இடையில் ஒரு திரை வந்தது போல் இருந்தது அவனுக்கு. இது நாள் வரையில் அவள் அப்படி பேசியதில்லை. 'தவறு யார் மீது?' என்பது அவனுக்கு தெரியவில்லை. 'ஒரு வேளை தவறு தனதாக இருந்தாலும் அது என்னவென்று சொன்னால் அல்லவா திருத்திக் கொள்ளலாம். ஒன்றுமே சொல்லாமல் போனால் எப்படி?' என்றெல்லாம் மனம் நினைத்து வருந்தியது. தீபாவும் மிகவும் காயப்பட்டிருக்க வேண்டும். அவளும் ஏதோ சிந்தனையிலேயே இருந்தாள். இருவராலும் சோதனையில் கவனம் செலுத்த இயலவில்லை. எல்லாம் முடித்துவிட்டு விரிவுரையாளரிடம் விடையை காட்டிய போது மேலும் கீழுமாக 5 நிமிடங்கள் பார்த்தார்.

"Are you guys given Castor Oil?"

"Yes Sir!"

"The numbers aren't correct. It's not even in the range. It's showing the viscosity of Honey." என்று சொல்லி இரண்டு நிமிடங்கள் யோசிப்பது போல் இருந்தார். பின்னர் "Okie. Please copy the numbers from Ranjani and redo your calculations".

வெளியே வரும் போது "Thanks Deepi." என்றான்.

"எதுக்கு?"

"நீ இருந்ததால தான் அவன் free யா விட்டான். இல்லேன்னா இந்நேரம் சாவு மணி அடிச்சுருப்பான். I think he loves you." என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

வேறொரு நேரமாக இருந்திருந்தால் அதற்கு தீபாவின் விடை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் அப்பொழுது ஒன்றும் சொல்லாமல் அமைதியாக சென்றுவிட்டாள். அன்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொலைப் பேசி ஒலித்தது. எடுத்து பேசிய அவன் தந்தை இவனிடம், "Saumya" என்று கூறி மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். நாக்கு வரண்டு உதடுகள் ஒட்டிக் கொள்ள வேகமாக சென்று அவளுடன் பேச தயாரானான்.

4 Comments:

CVR said...

ஆகா!!!
முக்கோணக்காதல் கதையா இருக்கும் போல இருக்கே!!
காதல் மேட்டர் பத்தி கேட்கும் போது ஒன்றும் தெரியாதது போல தீபா வெறுப்பேற்றியது எதார்த்தம்!!
தொடருங்கள்!
காத்திருக்கிறேன்!!! ;)

SathyaPriyan said...

//
CVR said...
ஆகா!!!
முக்கோணக்காதல் கதையா இருக்கும் போல இருக்கே!!
//
அப்படியா சொல்றீங்க? :-)

//
காதல் மேட்டர் பத்தி கேட்கும் போது ஒன்றும் தெரியாதது போல தீபா வெறுப்பேற்றியது எதார்த்தம்!!
தொடருங்கள்!
காத்திருக்கிறேன்!!! ;)
//
மிக்க நன்றி தல.

நாதஸ் said...

தல கதை சூப்பர்... அடுத்த பாகத்துக்காக வெய்டிங் :)

SathyaPriyan said...

//
nathas said...
தல கதை சூப்பர்... அடுத்த பாகத்துக்காக வெய்டிங் :)
//
நன்றி தல.